
நாட்டின் 15 ஆவது பொதுத்தேர்தல் எப்போது என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் முடிவு செய்யட்டும் என்று ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் தெரிவித்தார். டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு போதுமான அவகாசம் வழங்கும். பிரதமர் என்ற முறையில் பொதுத்தேர்தல் எப்போது என்பதை டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் முடிவு செய்யட்டும் என்று அவர் சொன்னார்.
