
அமெரிக்காவில் நேற்று நள்ளிரவில் அடித்த சூறாவளி காற்றில் பல வீடுகள் சேதமடைந்தன. பலி எண்ணிக்கை 100 -ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் கென்டுக்கி, இல்லினாய்ஸ் உள்ளிட்ட 5 மாகாண பகுதிகளை இந்த சூறாவளி தாக்கி உள்ளது. இதில் வணிக நிறுவனங்கள், பல வீடுகள் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. சாலைகளில் நிறுத்தப்பட்ட கார்களை அள்ளி சூறையாடியது இந்த புயல். இந்த புயல் வரலாற்றில் இல்லாத பெரும் புயல் ஆகும். இது பெரும் பேரிடர் சம்பவம். இதில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு மற்றும் சேதம் குறித்து முழுமையாக சொல்ல முடியவில்லை என்றார் அதிபர் ஜோ பைடன்.
