
சாலை போக்குவரத்துச் சம்மனுக்கு அளிக்கப்பட்ட 80 விழுக்காடு சலுகை தொகையைச் செலுத்துவதற்கானக் கால அவகாசம் வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்க தேசிய போலீஸ் படை முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர், டான்ஸ்ரீ அக்ரில் சானி தெரிவித்தார். இது போக்குவரத்துக் குற்றம் புரிந்தவர்கள் தங்கள் நிலுவைச் சம்மனைச் செலுத்த வழங்கப்படும் வாய்ப்பாகும். இதன் மூலம் தங்களின் அனைத்து நிலுவைச் சம்மன் தொகையையும் அவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் செலுத்தலாம் என்றார் அவர்.
