
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிட்ட கெஅடிலான் கட்சி 11 தொகுதிகளிலும் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் கண்ட தோல்வியால் இருந்து கெஅடிலான் விடுபடும் என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். தோல்விகளுக்கான அனைத்து பலவீனங்களும் உடனடியாக தீர்வு காணப்படும் என்று அவர் சொன்னார். கட்சியில் ஏற்பட்ட அனைத்து பலவீனங்களும் சரி செய்யப்படும். மேலும் சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையை பெறுவோம் என்று அவர் சொன்னார். ஆகவே கெஅடிலான் கட்சி மீண்டும் எழுச்சி பெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.
