
சரவா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று 20, 000 போலீஸ் மற்றும் இராணுவ வீரர்கள் வாக்களிக்கின்றனர். இன்று தொடக்க கட்ட வாக்களிப்பில் 12,585 இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களும் அவர்களின் துணைவியரும் 10,458 போலீஸ் அதிகாரிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் துணைவியரும் கலந்து கொள்கின்றனர். இந்த வாக்குப் பதிவு இன்று மாலை 5.00 மணி வரை நடைபெறும். இந்த தேர்தலில் மொத்தம் 349 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். வரும் சனிக்கிழமை 82 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்களிப்பு நடைபெறும்.
