33.9 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

செந்தோசாவில் உள்ள 4 பள்ளிகளுக்கு கோவிட்-19 தடுப்பு சாதனங்கள் அன்பளிப்பு

🔥 Views : 9
👁 Reading Now : 22

அடுத்தாண்டு பள்ளித் தவணை தொடங்கவுள்ளதை முன்னிட்டு சொந்தோசா தொகுதியிலுள்ள நான்கு தமிழ் மற்றும் சீன ஆரம்ப பள்ளிகளுக்கு கோவிட்-19 தடுப்பு சாதனங்கள் வழங்கப்பட்டிருப்பதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார். செந்தோசா தமிழ்ப்பள்ளி, லாடாங் ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி, பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி மற்றும் ஹின் ஹூவா சீனப் பள்ளி ஆகிய அந்த நான்கு பள்ளிகள் இந்த உபகணங்களைப் பெற்றன. ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 1,000 முகக் கவசங்கள், 100 சுயப் பரிசோதனைக் கருவிகள், 100 முகத் தடுப்பு கவசங்கள் ஆகியவை வழங்கப்பட்டதாக அவர் சொன்னார். இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வாயிலாக கோவிட்-19 நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும். மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் பள்ளிகள் எதிர்நோக்கும் சுமையைக் குறைக்கவும் இயலும் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles