
மூவாரில் மாணவர் ஒருவர் பகிடிவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து மாணவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். முவாரில் இடைநிலைப் பள்ளி மாணவரை கொடுமைப் படுத்தியதாக நேற்று கைது செய்யப்பட்ட ஐந்து 16 வயதுடைய மாணவர்கள் விசாரணைக்கு உதவுவதற்காக நேற்று முதல் மூன்று நாட்கள் விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்டனர் கடந்த டிசம்பர் 9 ம் தேதி நடந்த பகிடிவதை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இந்த மாணவர்கள் மலாக்கா, கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் ஜோகூர் பாரு ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டனர்
