
நாட்டில் பெய்து வரும் அடை மழையால் பகாங் மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் ஆறு அடி உயரத்திற்கு வெள்ளம் சூழ்ந்ததுள்ளது. இதனால் வழிபாடு மற்றும் பூஜைகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆலய வளாகத்தில் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் போக்குவரத்தும் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மாரான் மரத்தாண்டவர் ஆலயத்திற்கு வருவதை ஒத்தி வைக்கும்படி ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
