
15-ஆவது பொதுத் தேர்தல் நெருகுகின்ற இந்தத் தருணத்தில் பல கட்சிகளில் இருந்து தமக்கு அழைப்பு வந்தாலும் இனி, வாழ்வோ தாழ்வோ எதுவாயினும் தாம் டான்ஸ்ரீ மஹியாடின் யாசின் லைமையிலான பெர்சாத்துவிலேயே நீடிக்கப்போவதாக சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா கூறினார். கட்சியை வலுப்படுத்த தொடர்ந்து பாடுபடப் போவதாகவும் குறிப்பிட்ட அவர், பெர்சத்துக் கட்சியில் இணைய மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் செகாமாட் தொகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டபின் தொகுதியின் மக்கள் பிரதிநிதியுமான அவர் தகவல் தெரிவித்தார்.
