
பினாங்கு மாநில வளர்ச்சி கருதி மாநில அரசு தீட்டிய பெருந்திட்டங்கள் எதனையும் கைவிட மாட்டோம் என்று மாநில முதல்வர் சௌ கான் இயூ தெரிவித்துள்ளார். குறிப்பாக, போக்குவரத்து மேம்பாடு தொடர்பான அனைத்து மெகா திட்டங்களையும் மாநில அரசாங்கம் ஒரு போதும் கைவிடாது. பொருளாதார சவால்கள் இருந்தாலும் பினாங்குவாழ் மக்களின் நலன்களுக்கான அனைத்து பெருந்திட்டங்களும் தொடரும் என்று ஜாலான் பாயா தெருபோங்கில் புக்கிட் குக்குஸ் இரட்டை சாலையை தொடக்கி வைத்தபோது சௌ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
