
கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சுகாதார அமைச்சு மேற்கொண்டு வரும் பெரியவர்களுக்கான மூன்றாவது தடுப்பூசி – பூஸ்டரை, இன்று ஜனவரி 19 முதல் சந்திப்ப்புறுதி இன்றி நேறடியாக பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோலாலம்பூர் உலக வர்த்தக மையம், புக்கிட் ஜாலில் அக்சியாட்டா அரங்கம், ஷா ஆலம் ஐடியல் மாநாட்டு மையம், கிள்ளான் சொக்கா காக்காய் அரங்கம் ஆகிய நான்கு மையங்களில் பூஸ்டர் தடுப்பூசியை மூத்த குடிமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
