
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக பதவியேற்றுள்ள மாண்புமிகு டத்தோ ஹாஜி இஸ்மாயில் பின் லாசிம் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.தாங்கள் மந்திரி பெசாராக பொறுப்பேற்றிருப்பது, மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும், நீண்டகால அர்ப்பணிப்பான பொதுச் சேவைக்கும் கிடைத்த உயரிய அங்கீகாரமாகும்.தங்களின் தலைமையில் நெகிரி செம்பிலான் மாநிலம் மேலும் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், முதலீட்டு வாய்ப்புகள், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டில் புதிய சாதனைகளைப் படைக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்குள்ளது.அனைத்து இன, மத மக்களையும் சமமாக அரவணைத்து, ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னெடுக்கும் சிறந்த நிர்வாகத்தை தாங்கள் வழங்குவீர்கள் என்றும் நம்புகிறேன்.நெகிரி செம்பிலான் மாநிலத்தின் வளமான எதிர்காலத்திற்காக தங்களின் புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு, மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் தொடர்ந்து பெற்றிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.மீண்டும் ஒருமுறை, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக பதவியேற்றுள்ள தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், எல்லா வெற்றிகளும் கிடைக்க என் இனிய நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.– தொழிலதிபர் ஆறுமுகம் சுரேஷ்



