
லட்சக்கணக்கான பங்குரிமை தொடர்பான சர்சையை எதிர்நோக்கியுள்ள எம்ஏசிசி தலைவர் அஸாம் பாக்கி, பேரரசரை சம்பந்தப்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. ராமசாமி கேட்டுக் கொண்டார். தன் மீதான நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அஸாம் மனம்போன போக்கில் பேசி வருகிறார் என அவர் குறிப்பிட்டார். பேரரசரை தவிர வேறு யாராலும் தம்மை பதவியிலிருந்து அகற்ற முடியாது என அஸாம் பாக்கி விடுத்த அறிக்கை குறித்து அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
