
நிதிச் சுமையை எதிர்நோக்கியுள்ளவர்கள் தங்களின் இ.பி.எப். கணக்கில் இருந்து பணத்தை மீட்பதற்கு அனுமதியளிப்பதன் தொடர்பில் தலையிடும்படி இஸ்தானா நெகாராவிடம் ஓர் அரசு சார்பற்ற இயக்கம் இன்று விண்ணப்பம் செய்துள்ளது. தங்களது ஓய்வூதிய சந்தா தொகையிலிருந்து ஒரு முறை மட்டும் 10,000 வெள்ளியை மீட்பதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என PRO Rakyat இயக்கம் முன்னதாக அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது. இந்த நிலையில், இந்த சிக்கலில் அரண்மனை தலையிட வேண்டும் என கேட்டுக் கொள்ளும் கோரிக்கை மனு, அரண்மனைப் பொறுப்பாளரிடம் வழங்கப்பபட்டுள்ளது.
