
ஜோகூர் சட்டமன்ற தேர்தலுக்காக அம்மாநிலத்திலுள்ள இடைநிலைப் பள்ளிகள் வாக்குச் சாவடிகளாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று தேர்தலை ஆணையத்தை கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. SPM தேர்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் சுமூகமாக முன்னெடுக்கப்-பட்டுள்ளன. அதில் பாதிப்பு ஏற்படக்கூடாது என கல்வி அமைச்சர் Radzi Jidin தெரிவித்தார். மாணவர்களைப் பொறுத்தவரை, கோவிட் தொற்றினால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி.எம். மாணவர்கள்தான். எனவே ஜோகூர் தேர்தலின்போது இடைநிலைப்ப பள்ளிகள் வாக்கு சாவடிகளாக பயன்படுத்தப்பட்டால் SPM தேர்வுக்கான ஏற்பாடுகள் பாதிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
