
லோ சியூ ஹோங் என்னும் தாய், தன் கணவனால் கடத்தப்பட்டதாகக் கருதப்படும் மூன்று பிள்ளைகளைத் தேடி பரிதவித்து நின்ற நிலையில், சமூக நலத்துறை குறுக்கே புகுந்து அப்பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பை உண்மைத் தாயிடம் இருந்து பறித்துக் கொண்ட நிலையில், பெண்கள் குடும்ப சமூக நல அமைச்சர் ரீனா ஹரூண் தன் கடமையில் இருந்து தவறியுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார் பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பை 34 வயதான அந்தத் தாய்க்கு உயர்நிதி மன்றம் ஏற்கெனவே அளித்துள்ள நிலையில், அவர் ஆட்கொணர்வு மனுவை சமர்ப்பிக்கும்வரையில் சமூக நலத் துறை அப்பிள்ளைகளை தன்னுடைய பிடியில் வைத்துக்கொண்டிருந்தது ஏன் என்று வினாத் தொடுத்துள்ள அவர், தாமதிக்கப்படும் நீதி, தடுக்கப்படும் நீதிக்கு சமம் என்று எம்ஏபி கட்சித் தலைவருமான அவர் தெரிவித்துள்ளார்.
