
பகாங் மாநில அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தினார் என்று பெந்தோங் ஜசெக எம்.பி. Wong Tack-ற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பகாங்கில் மரம் வெட்டும் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பாக மிகுதியான அளவில் மேற்கொள்ளப்பட்டதாலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளைச் சேர்ந்த வனப்பகுதி அத்துமீறப்பட்டதாலுமே வெள்ள நிலைமை மோசமடைந்தது என்று கடந்த டிசம்பர் மாதம் 28, 30-ஆம் நாட்களில் முகநூல் சமூக வளைதலத்தில் காணொளிக் காட்சியைப் பதிவேற்றி செய்தியையும் வெளியிட்டார் என்று Wong Tack மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் பகாங் அரசிடம் அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஒரு மில்லியன் இழப்பிட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் அந்த வழக்கில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
