
கிள்ளான், ஜாலான் கெபுன் நெனாஸ் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக வேளாண் திட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அத்திட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையில் செந்தோசா சட்டமன்றத் தொகுதி தோட்டக் கலை போட்டியை நடத்தவுள்ளது. இந்தத் திட்டத்தின் வாயிலாக சட்டவிரோதமாக குப்பைக் கொட்டும் நடவடிக்கைகளை தடுக்கும் அதேவேளையில் விவசாயத்தில் ஈடுபடுவதன் மூலம் வட்டார மக்கள் உபரி வருமானத்தையும் பெறுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்த முடியும் என்று தொகுதி செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.

நான்கு பிரிவுகளாக நடத்தப்படும் இப்போட்டியில் 60 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். அழகியத் தோட்டம், கலைநயத்துடன் கூடிய தோட்டம், சுத்தமான தோட்டம், வசீகரிக்கும் அறிவிப்பு ஆகியப் பிரிவுகளில் போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

