
சிறார்களுக்கான கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின்கீழ் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த விரும்பும் பெற்றோரை மற்ற தரப்பினர் அச்சுறுத்த வேண்டாம் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் வலியுறுத்தியுள்ளார். இப்போது அதிகமான பெற்றோர்கள் தடுப்பூசி மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இது முக்கியமான கட்டம். அதனால், சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த விரும்பும் பெற்றோரைத் தடுக்கவேண்டாம் என்று கேட்டுள்ள அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் மகன் ரைஃப்புக்கு தடுப்பூசி செலுத்தும்போது ஊசியை அவரது பார்வையில் இருந்து மறைத்த தாதியின் தொழில் நிபுணத்துவத் திறனைப் பாராட்டினார்.
