
சுகாதார அமைச்சின் முன்களப் பணியாளர்களில் ஏறக்குறைய 8,940 பேர் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகினர் என சுகாதார தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் Noor Hisham Abdullah தெரிவித்தார்.
இவ்வாண்டு முதல் இரு வாரத்தில் 284 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகினர். ஆறாவது வாரத்தில் 3,343 முன்களப் பணியாளர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர்.
தொற்றுக்கு உள்ளான மொத்த முன்களப் பணியாளர்களில் 5,711 பேர் வேலைக்கு வர இயலாமல் விடுமுறையில் இருந்தனர் என்றும் டாக்டர் Noor Hisham தெரிவித்தார்.
