
ஐக்கிய நாடுகள் சபை, பொதுப் பேரவையின் 11வது அவசரகால சிறப்பு அமர்வில் ‘உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு’ என்ற தலைப்பில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நகல் திர்மானத்திற்கு ஆதரவாக மலேசியா நேற்று புதன்கிழமை வாக்களித்தது.
இதன் தொடர்பில் வெளியுறவு அமைச்சகம்-விஸ்மா புத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐநா சாசனத்தின் கொள்கை, நோக்கம், பிராந்திய ஒருமைப்பாடு, அந்தந்த நாட்டின் தனி இறையாண்மை உள்ளிட்ட கொள்கைகளில் மலேசியா கொண்டுள்ள உறுதிப்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
