
வங்க தேசத்தின் தூதராகப் பணியாற்றிவிட்டு, பணிக் காலம் முடிந்ததும் தாயகம் திரும்பாமல் ஐநா அகதித் தகுதியுடன் மலேசியாவிலேயே தங்கி வருபவர் Mohamed Khairuzzaman.
இப்பொழுது, வெறுப்பு சமயப் பிரச்சாரகர் ஜாஹிர் நாய்க்கிற்கு அளிக்கப்பட்டதைப் போல மலேசியாவில் நிரந்தர வசிப்புக்கு வகைசெய்யும் சிவப்பு அடையாள அட்டை தனக்கும் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
ஜாஹிர் நாய்க்கைப் போல தானும் தாயகத்திற்குத் திரும்பினால் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும். மலேசிய அரசு தன்னை நாடுகடத்தினால், உடனே என்மீது வழக்கு தொடரப்படும்; வங்காள தேசத்தில் என் பாதுகாப்பு கேள்விக்குரியது என்பதால் மலேசிய அரசாங்கம் என் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று Mohamed Khairuzzaman கேட்டுள்ளார்.
