
தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரித்தால் அது, சிறு-நடுத்தர தொழில்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பன்னாட்டு வாணிக தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி கூறியிருப்பது, தொழிலாளர் சமூகத்திற்கு இழைக்கும் துரோகம் என மனித வள முன்னாள் அமைச்சர் மு.குலசேகரன் சாடியுள்ளார். வெ. 1,200 குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பதற்குமுன், தொழில்துறை-யினரின் சிரமத்தை அரசாங்கம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியிருப்பதாக அஸ்மின் கூறியிருந்த நிலையில், கடந்த பொதுத்தேர்தலின்போது, குறைந்தபட்ச சம்பளம் ஆண்டுதோறும் அதிகரிக்கப்படும் என்று நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில்தான் அஸ்மின் வெற்றி பெற்றார் என்று குலசேகரன் குறிப்பிட்டுள்ளார்.
