
Perlis-இல் wang Kelian மற்றும் kedah-வில் Bukit Kayu Hitam ஆகிய பகுதிகளில் இருந்து மலேசியாவுடனான தனது தரை மார்க்கத்தை ஏப்ரல் 1ஆம் தேதி திறப்பதற்கு தாய்லந்து இணக்கம் தெரிவித்துள்ளது.
மலேசிய மற்றும் தாய்லாந்து மக்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும்; Perlis சிலுள்ள Padang Besar எல்லையை உடனயாக திறப்பது குறித்து தாய்லாந்து அரசாங்கத்துடன் பேச்சு நடத்தும்படி சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பிரதமர் டத்தோஸ்ரீ Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.
எல்லை திறக்கப்படுவதன் மூலம் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு பலன் விளையும் என்பதோடு எல்லைப் பகுதியிலுள்ள உள்ளூர் மக்களும் ஆக்கப்பூர்வமான நன்மையை பெறுவார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
