
15-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின் மத்தியக் கூட்டரசை அமைப்பதற்கு தேசிய முன்னணிக்கு பிற கட்சிகளின் ஆதரவு தேவைப்படக்கூடும் என்று அம்னோ முத்த தலைவர் தெங்கு ரஸாலி தெரிவித்துள்ளார்.
அண்மைய ஜோகூர் தேர்தலில் பாதிக்கும் குறைவான வாக்காளர்களின் ஆதரவைத்தான் தேசிய முன்னணி பெற்றுள்ளது; தவிர, பாதி அளவு வாக்காளர்கள் தேர்தலில் கலந்து கொள்ளவில்லை.
இந்தக் கூறுகளின் அடிப்படையில், தேசிய முன்னணிக்கு அறுதிப் பெரும்பான்மை கிட்டாமல் போகலாம் என்றும் அதேவேளை தாம் போட்டியிடப் பொவதில்லை என்றும் 1986 முதல் தொடர்ந்து 8 முறைகளாக குவாங் மூசா தொகுதியில் வென்று வருபவருமான ரஸாலி தெரிவித்துள்ளார்.
