
தற்போதைய நாடாளும்னறத்தில் ஜசெக கொண்டிருக்கும் 42 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையில் அடுத்த 15-ஆவது பொதுத் தேர்தலில் ஐந்து இடங்கள்வரை குறையலாம் என்று ஜசெக புதிய தலைவர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
தலைவராகப் பொறுப்பேற்ற பின், ஜசெக சிலாங்கூர் மாநில பொறுப்பாளர்களிடையே ஆற்றிய கன்னி உரையின்போது பேசிய லிம், ஜோகூர் மாநிலத் தேர்தலின் அடிப்படையில் இப்படி அவதானம் செய்வதாகக் கூறினார்.
ஆனால், தேர்தல் காலத்தில் நிலைமை மேம்பாடு அடைவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
