
கடந்த புதன்கிழமை மக்களவையில் சொஸ்மா எனப்படும்
பாதுகாப்பு சட்டம்-2012(சிறப்பு நடவடிக்கை) துணை விதி 4, உட்பிரிவு 5-ன் அமலாக்கத்தை நீட்டிப்பதற்கான வாக்களிப்பு நடத்தப்பட்டது.
அதற்கு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்காதது, கடந்த செப்டம்பர் 13-இல்அரசாங்கம் மற்றும் எதிர்கட்சிக்கு இடையே கையெழுத்திடப்பட்ட அரசியல் உருமாற்றம், மற்றும் அரசியல் நிலைத்தன்மை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறவில்லை என்று கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
