
கோலாலம்பூர் சன் பெங் சாலையில் அமைந்துள்ள டத்தோ ஓன் இடைநிலைப் பள்ளியில் தமிழ் பயிற்றுவித்துவந்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டதால், தற்பொழுது ஆசிரியர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால், இப்பள்ளியில் 2022 கல்வியாண்டில் ஒன்று முதல் ஐந்தாம் படிவம்வரை பயிலும் தமிழ் மாணவர்கள் தங்கள் தாய்மொழியைக் கற்கும் வாய்ப்பை இழந்து நிற்கின்றனர். இதுவரை தமிழ்-தமிழிலக்கியப் பாடங்களைப் கற்றுக் கொடுத்த ஆசிரியர் வேற்றுப் பள்ளிக்கு மாற்றப்பட்டாலும் அந்த இடத்திற்கான மாற்று ஆசிரியரை நியமிப்பதற்கான உரிய ஏற்பாட்டை மாவட்ட கல்வி அலுவலகம் செய்யவில்லை.
இதனால் தமிழ் மொழி பாடத்துக்கான பயிற்றுநேரம் கால அட்டவணையில் இடம்பெற்று இருந்தாலும், ஆசிரியர் இல்லாத நிலையில் மாணவர்களின் தாய்மொழிக் கல்வி பாதிக்கப்படுகிறது.
