
ஏப்ரல் முதலாம் தேதி முதல் மலேசியாவும் சிங்கப்பூரும் பயணிகளுக்கு தத்தம் எல்லைகளைத் திறக்கும்போது, அவ்விரு நாடுகளுக்கு இடையில் அனைத்து வகை பொதுப் போக்குவரத்து சேவைகளும் மீண்டும் வழக்கம்போல் தொடங்குமென, போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் ( Datuk Seri Dr. Wee Ka Siong ) தெரிவித்தார். ஆங்காங்கே பயணிகளை இறக்கி விட்டு ஏற்றி செல்லும் பேருந்துகள், விரைவு பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள், தொழிலாளர் பேருந்துகள், டெக்சி உள்ளிட அனைத்து வகை பொது போக்குவரத்து சேவைகளும் வழக்கம் போல் எல்லை கடந்து பயணங்களைத் தொடருமென அவர் கூறினார்.
