
பினாங்கு மாநிலத் தேவைக்காக பேராக் ஆற்றில் இருந்து சுத்திகரிக்கப்படாத தண்ணீரை வழங்கும்படி விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க முடியவில்லை என்று பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட் தெரிவித்துள்ளார்.
பேராக் மாநில மக்களின் தேவைக்கான
புனல் மின்சாரத் தயாரிப்பு, விவசாயம், மீன்வளர்ப்பு போன்ற துறைகளுக்கு பேராக் ஆற்றில் இருந்துதான் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் பினாங்கு மாநிலக் கோரிக்கையை ஏற்க முடியாத நிலையில் பேராக் மாநிலம் இருக்கிறது என்று இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் சாரணி முகமட் அறிவித்தார்.
