
இந்தோனேசியாவைச் சேர்ந்த 43 சட்டவிரோத குடியேறிகளை ஏற்றி வந்த படகை மலேசியக் கடலோர காவல்படையின் சிலாங்கூர் மாநில அதிகாரிகள் காப்பார் Sungai Janggut பகுதியில் தடுத்து நிறுத்தினர்.
அந்தப் படகில் இருந்த 30 ஆடவர்களும் 12 பெண்களும் தடுத்து வைக்கப்பட்டனர். நேற்றைய முந்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் கடல் கண்காணிப்பு ராடார் முறையில் ஜெராம் Pulau Angsa கடல் பகுதியில் ஒரு படகு சந்தேகத்திற்குரிய வகையில் சென்றதைத் தொடர்ந்து அதனை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் கடல் அமலாக்க நிறுவனத்தின் அதிகாரிகள் ஈடுபட்டதாக அதன் இயக்குனர் Mohammad Rosli Kassim தெரிவித்தார்.
