
உலக அளவில் இளவயதினர் மத்தியில் இதயநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதற்கு பல்வேறு காரணங்காகளை மருத்துவத் துறையினர் முன்வைக்கின்றனர்.
கொரோனா நோய்த் தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளைத் தடுப்பதில் உலக நாடுகள் தீவிர கவனம் செலுத்தியதால், அந்தந்த நாடுகளின் மருத்துவத் துறையினரிடையே இதர நோய்களை கண்காணிக்கும் பணியில் தொய்வும் சுணக்கமும் ஏற்பட்டன.
இதன் விளைவாக, இருதயம் சம்பந்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அண்மைய மாதங்களாக அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக இளைய வயதினரிடையே இதயநோய் மரணங்கள் அதிகரித்து வருவதாகவும் உலக அளவில் மருத்துவத் துறையினர் அச்சம் அடைந்து வருகின்றனர்.
