
மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி Nazlan Mohd Ghazali-யின் விசாரணைக்கு பின்னால் மறைந்துள்ள உள்நோக்கம் குறித்து கேள்வியெழுப்பியிருக்கின்றார் பினாங்கு துணை முதலைமைச்சர் பி. ராமசாமி.
நீதிபதிகளும் சட்டவிதிகளுக்கு உட்பட்டவர்கள்தான் எனினும் நீதிபதி Nazlan-னுக்கு எதிரான விசாரணை, நீதித் துறைக்கு எதிரான ஒரு மருட்டலாக அமைகிறது. முன்னாள் பிரதமரை உட்படுத்திய வழக்கில் அவர் சாதகமாக நடந்து கொள்ளாதது அதற்கான காரணாமா என ராமசாமி கேள்வி எழுப்பினார்.
SRC வழக்கில் நஜீப் குற்றவாளி என தீர்ப்பளித்தவர் நீதிபதி Nazlan. அதன் அடிப்படையில் திறமையான துணிச்சலான அந்த நீதிபதி மீது சட்டம் பாய்வது சரியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
