
Kuala Selangor நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாக பரவியிருக்கும் வதந்தி உட்பட அரசியல் விவகாரங்கள் குறித்து தாம் இதுவரை எதுவும் யோசிக்கவில்ல என நிதியமைச்சர் Tengku Zafrul Aziz கூறியிருக்கின்றார்.
அண்மைய காலமாக இவர் l, Kuala Selangor தொகுதிக்கு சென்று வருவதோடு, நிதியமைச்சு அந்த வட்டாரத்தை தத்தெடுத்திருப்பதை அடுத்து , அவர் அடுத்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடக் கூடுமென பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தாம் தற்போது நாட்டை மீட்சிப் பெறச் செய்யும் நடவடிக்கையில் கவனம் செலுத்தி வருவதாகவும், அரசியல் குறித்து யோசிக்க தமக்கு நேரமில்லை எனவும் Tengku Zafrul கூறியிருக்கின்றார்.
