
மலேசியாவும் துருக்கியும் தங்களுக்கிடையே தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் இருதரப்பு ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.
துருக்கிய தூதர் Merve Safa Kavakci, துருக்கியின் இரண்டு பாதுகாப்புத் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இன்று மரியாதை நிமித்தம் சந்தித்தபோது கலந்துரையாடப்பட்ட அம்ங்களில் இதுவும் ஒன்றாகும்.
துருக்கியை சேர்ந்த Makina Kimya Endustrisi Kurumu-MKE தலைமை நிருவாக அதிகாரி Servet Akkaynak, துருக்கி வின்வெளி தொழிலகத்தின் தலைமை நிருவாக அதிகாரி Temel Kotil ஆகியோர் தங்களின் நிறுவனங்களை பார்வையிட அழைப்பு விடுத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
