
ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து 1.3 மில்லியன் ரிங்கிட் பெற்றதாக அதன் நிர்வாக நிர்வாகி நேற்று நீதிமன்றத்தில் கூறிய தகவலை முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ Muhyiddin Yassin மறுத்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்டு மாதங்களுக்கிடையே அந்த தொகையை அளித்ததாக அகமட் ஸாஹிட் ஹமிடியின் லஞ்ச ஊழல் வழக்கில் சாட்சியமளித்தபோது டேவிட் டான் என்பவர் கூறினார்.
ஆனாலும், அதனை தாம் மறுப்பதாக Muhyiddin தெரிவித்தார். அந்த சமயத்தில் தாம் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டிருந்ததோடு மேல் சிகிச்சைக்காக பல மாதங்கள் விடுமுறையில் இருந்ததையும் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த Muhyiddin கூறினார்.
