
தேசிய மொழியுடன் ஆங்கில மொழியையும் அதிகாரப்பூர்வ மொழியாக சரவாக் மாநிலம் நிலைநிறுத்தியிருப்பதை அடுத்து, அவ்விவகாரத்தில் கூட்டரசு அரசாங்கத்துடன் மாநில அரசாங்கம் ஒத்துப் போகவில்லை என அர்த்தமாகாது.
பல இன, பல கலாச்சார, பல மொழி பேசும் மக்களைக் கொண்ட சரவாக் மாநிலத்தின் பூகோள அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பார்ப்பது அவசியமென, அம்மாநில முதலமைச்சர் Abang Johari Openg கூறியிருக்கின்றார்.
அத்துடன் சரவாக் இலக்கவியல் பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கும் அதேவேளை, அதன் தொடர்பான அதிகமான ஆங்கில வார்த்தைகளை தேசிய மொழியில் மாற்ற இயலாது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
