
பொருட்களை விநியோகம் செய்யும் மோட்டார் சைக்கிளோட்டிகளின் வயதை, அரசாங்கம் 21- லிருந்து 18 -ஆக குறைக்கும். அதிகமான இளைஞர்களுக்கு, கூடுதல் வருமானத்தை ஈட்டும் வாய்ப்பினை ஏற்படுத்துவதற்காக, அந்த வயது வரம்பை அரசாங்கம் குறைக்க திட்டமிட்டிருப்பதாக, போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் தெரிவித்தார்.
அதற்கான சட்டத் திருத்தம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படுமென அவர் குறிப்பிட்டார்.
