26.4 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

தாஜூடின் வெளியிட்ட தகவல் கடுமையானது:
-ஜாஹிட்டும் நஜீப்பும் விளக்கம் தரவேண்டும்

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக வருவதற்கு ஆதரவு வழங்கும் சத்திய பிரமான வாக்குமூல பிரகடனத்தில் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டதாக அக்கட்சியின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ Tajuddin Abdul Rahman அம்பலப்படுத்தியது கடுமையானது என்பதால் அது குறித்து அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடியும் தேசிய முன்னணியின் ஆலோசகரான போஸ்கூ எனப்படும் நஜீப் துன் ரசாக்கும் விளக்கம் அளிக்க வேண்டுமென ம.இ.கா தகவல் பிரிவுத் தலைவர் தினாளன் ராஜகோபாலு கேட்டுக்கொண்டார்.

ஒரு வேளை Tajuddin கூறியது உண்மை என நிருபிக்கப்பட்டால் அதில் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு எதிராக தேசிய முன்னணி உச்சமன்றம் உடனடி நடவடிக்கை எடுக்க வெண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Tajuddin அறிக்கை பொய்யாக இருக்குமானல் இந்த வினாடிவரை அந்த இரு தலைவர்களிடமிருந்து ஏன் மறுப்பு அறிக்கை வரவில்லை என்றும் Tajuddin-னுக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தினாளன் வினவினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles