
Prasarana malaysia நிறுவனத்தின் தலைவராக இருந்த டத்தோ ஸ்ரீ தாஜுடீன் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு ஆணையம் இவரை கைது செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இவர் விடுவிக்கப் பட்டிருக்கிறார் என்று sinar harian நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுபற்றி அவரிடம் தொடர்பு கொள்ள sinar harian முயன்று வருவதாக தெரிவித்துள்ளது.
LRT ரயில்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் பலர் காயமுற்று கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள.
இந்த விபத்து குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. – Sinar Harian
