
கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் 10 முதல் 20 விழுக்காட்டினர் ஒன்று முதல் ஒன்பது வயதுக்குட்பட்ட வர்கள் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக செல்கேட் கார்ப்ரேஷன் சென். பெர்ஹாட் சந்தை மற்றும் தொடர்பு பிரிவு அதிகாரி நோராபிடா ஜம்ரி கூறினார்.
முன்பு முதியோர்கள் இந்நோய்த் தொற்றுக்கு இலக்கான நிலையில் தற்போது அந்நிலை மாறி சிறார்கள் அதிகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுள்ளது.
சிறார்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது இதற்கு காரணம்.
தங்கள் பிள்ளைகளுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் இலவச கோவிட் பரிசோதனைக்கு அழைத்து வரும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
