
15ஆவது பொதுத்தேர்தலை நடத்த பொருத்தமான தேதியை தேசிய முன்னணி பிரதமரிடம் பரிந்துரைக்கும் என அம்னோவின் துணைத் தலைவர் Mohd Hasan (முகமட் ஹசான்) தெரிவித்தார்.
தாமும் அமாட் ஸாஹிட் ஹமிடியும் தீர ஆராய்ந்து தக்க தேதியை அளிக்கப் போவதாகவும், இஸ்மாயில் சப்ரியும் பொதுத்தேர்தல் தேதியை தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் தேசிய முன்னணியின் சார்பில் கெராக்கான் நீண்ட காலம் பினாங்கு முதலமைச்சர் பதவியை வைத்திருந்தததை அடுத்து, இனி அப்பதவியை அம்னோ கைப்பற்றுமா என்ற கேள்விக்கு முகமட் ஹசான் பதில் சொல்ல மறுத்து விட்டார்.
