
சொஸ்மா எனப்படும் 2021ஆம் ஆண்டு பாதுகாப்புக் குற்றங்கள்(சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் மட்டுமல்லது இதர நபர்களும் விசாரிக்க முடியும் என்று பத்து காவான் எம்பி Kasthuri Pattu (கஸ்தூரி பட்டு) எச்சரித்தார்.
ஊடகத்தில் பணியாற்றுவோர் மீது இச்சட்டம் திட்டமிட்டு பாயும் என்றும் அரசியல் எதிரிகளை அழிக்க எதிர்க்கட்சியினர் மீதும் இச்சட்டத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இச்சட்டத்தின் வழி எம்பிக்கள், சபாநாயகரின் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். சந்தேகத்தின் பேரில் இச்சட்டத்தின் வழி நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் 28 நாள்களுக்குப் பின்னரும் விசாரணை இன்றி தடுத்து வைக்க முடியும்.
இந்தச் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக 105 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில் மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டது. 83 பேர் இதனை எதிர்த்த வேளையில், 32 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
