
கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதாவை மாநில அரசு வரும் நவம்பர் மாதம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் கூறினார். நேற்று முன்தினம் மூன்றாவது வாசிப்புக்குப் பின்னர் அந்த சட்டத்தை நிறைவேற்றிய மக்களவையின் நடவடிக்கையை மாநில அரசும் பின்பற்றவுள்ளதாக அவர் சொன்னார். நாடாளுமன்றத்தின் வழியைப் பின்பற்றி மாநில நிலையிலும் அந்த சட்டத்தை நிறைவேற்றவிருக்கிறோம். இவ்விவகாரம் தொடர்பில் அவைத் தலைவரான மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடன் விரைவில் சந்திப்பு நடத்தவுள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.
