
ஒழுங்கில்லாத போலீஸ்காரர்களை தூக்கி எறியும் குப்பை கொட்டும் இடமாக சபா, சரவாக்கை நடத்தக் கூடாதென கோத்தா பெலுட் எம்பி Inaraisa Majilis (இஸ்னரைசா மாஜிலிஸ்) சாடியுள்ளார். கட்டொழுங்கு இல்லாத போலீஸ்காரர்களால் சபா, சரவாக் கெட்டு போய்விட்டதாக அவர் குறிப்பிட்டார். அண்மையில் சிலாங்கூர், கோம்பாக்கில் ஒரு வர்த்தகரை மிரட்டிப் பணம் பறித்த 9 போலீஸ்காரர்கள் சபாவிற்மும் சரவாக்கிற்கும் அனுப்பப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்களில் கான்ஸ்டபள், சப் இன்ஸ்பெக்டர்களும் அடங்குவர்.
