
15ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி தனித்தே போட்டியிடும் என்று அம்னோவின் தேர்தல் இயக்குநர் Muhammad Hasan தெரிவித்தார். ஆட்சியை அமைக்க கூட்டணியின் உறுப்புக் கட்சிகள் கடுமையாகப் போட்டியிடும் என்று அவர் தெரிவித்தார். தேசிய முன்னணிக்குப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மற்ற கட்சிகளோடு இணைந்து நிலையான ஆட்சியை அமைக்க தேசிய முன்னணி முனையும் என்று அவர் தெரிவித்தார்.
