
தேசிய முன்னணி மகளிர் அணி நடத்தும் வாக்காளர் ஆய்வு சாதகமாக இருந்தால் பொதுத்தேர்தலை நடத்த நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று பிரதமர் Ismail Sabri Yaccob (இஸ்மாயில் சப்ரி யாக்கோப்) தெரிவித்தார். மகளிர் அணியின் ஆய்வினை அடிப்படையாக வைத்து, பொதுத்தேர்தலில் வெல்வதற்கான வியூகம் வகுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். கட்சியின் தகவல்களைப் பொதுமக்களுக்கு விநியோகிக்க மகளிர் அணியினர் பாடுபட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
