
15ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி தோற்குமானால் தமது துணைத் தலைவர் பதவியைத் துறக்கப் போவதாக முகமட் ஹசான் தெரிவித்தார். தேசிய முன்னணி தேர்தல் இயக்குநரான அவர் இத்தேர்தலில் கூட்டணி தோற்குமானால், அடுத்தடுத்த தேர்தல்களில் ஆட்சியைக் கைப்பற்றுவது மிகவும் கடினம் என்றும் தெரிவித்தார். நாம் கட்டாயமாக வெற்றி பெற வேண்டும். புத்ரா ஜெயாவைக் கைப்பற்ற இதுவே இறுதியான வாய்ப்பு என்றும் தேசிய முன்னணி மகளிர் மாநாட்டில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
