
கடற்படைக்குப் போர்க்கப்பல் கட்டும் விவகாரம் சுடுபிடித்து வருவதால் அக்கப்பல் கட்டுமானத்திற்கு 170 கோடி ரிங்கிட்டுக்கு இயந்திரங்களை வாங்கிய தற்காப்பு அமைச்சின் முக்கிய நபர் மீது ஊழல் தடுப்பு ஆணையம் வழக்கு தொடுக்கும் என மலாய் பத்திரிகை ஒன்று கோடி காட்டியுள்ளது. இது சம்பந்தமான துல்லியமான புலனாய்வுக்கும் பின்னர் எம்ஏசிசி இந்தப் பரிந்துரையை சட்டத் துறைத் தலைமையகத்திற்குப் பரிந்துரைத்துள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட பொருள்கள் இனிமேலும் பயன்பபடுத்த முடியாமல் கெட்டுப் போய் அது இத்திட்டதிற்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அதில் சிலர் சுய லாபம் கண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
