
கடந்த புதன்கிழமை மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பின்போது, அழகுக்காக வைக்கப்பட்டிருந்த செடிகள் மிதித்து சேதப்படுத்தப்பட்டதால், 7 லட்சம் ரிங்கிட் வரையில் நட்டம் ஏற்பட்டிருப்பதாக, DBKL –கோலாலம்பூர் மாநகர் மன்றம் தெரிவித்தது.
அன்றைய தினம், எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமானோர் அணிவகுப்பைக் காண திரண்டிருந்தனர். அதனால், மெர்டேக்கா சதுக்கத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த செடிகள் சேதமாக்கப்பட்டது மட்டுமல்ல , வருகையாளார்கள் குப்பைகளை ஆங்காங்கே வீசியிருந்ததாக, மாநகர் மன்றத் தலைவர் Datuk Seri Mahadi Che Ngah தெரிவித்தார்.
